லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் ஜூன் 18ம்தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்தியா, 2வது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதன்முறையாக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் நடப்பதால் பட்டம் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த போட்டியை காண சுமார் 4 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகளில் மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.