பிசிசிஐ: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, தர்மசாலா மற்றும் லக்னோ ஆகிய 9 இடங்களில் போட்டியை நடத்த பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் திட்டமிட்டப்படி தொடர் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாவிடில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.