திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றி ஓராண்டுக்கு முன் இறந்த முன்னாள் ஊழியரின் வீட்டில் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை தேவஸ்தான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் சீனிவாச்சாரி. கோயில் ஊழியர் என்ற அடிப்படையில் இவர், தங்கிக்கொள்ள திருப்பதி சேஷாசலம் நகரில் தேவஸ்தானம் சார்பில் இவருக்கு வீடு வழங்கப்பட்டது. இதற்கிடையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்நிலையில் சீனிவாச்சாரி, ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் வசித்து வந்த வீடு பூட்டியிருந்தது. சீனிவாச்சாரிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தேவஸ்தானம் வழங்கிய அந்த வீட்டை மீண்டும் கையகப்படுத்த முடிவு செய்தது.