இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனாவால் உயிரிழப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனாவால் உயிரிழந்தார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த பியூஸ் சாவ்லாவின் தந்தை பிரமோத் குமார் சாவ்லா சிகிச்சை பலனளிக்காமல் மும்பையில் உயிரிழந்தார்.

தந்தை இல்லாமல் எனது வாழ்க்கை முன்பு போல் இருக்காது என அவரது தந்தை இறப்புக்கு பின் பியூஸ் சாவ்லா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலத்தின் தூண் போன்ற நபரை இழந்து விட்டேன் எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் பியூஸ் சாவ்லாவின் தந்தை இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் துறையை சேர்ந்த சக வீரர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: