இந்தியா ‘இந்திய மக்களை புறக்கணித்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை’!: சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம்..!! May 19, 2021 சீரம் இந்தியா அதிகாரி தில்லி டெல்லி: இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று சீரம் இந்தியா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலை தீவிரமாகியுள்ளது. இதனால் நாட்டின் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் முன்னுரிமை காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்தியா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா, கடந்த ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் கொண்டதன் அடிப்படையில், சில நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக கருதக்கூடாது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கையானது ஓரிரு மாதங்களில் முடியும் செயல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். … The post ‘இந்திய மக்களை புறக்கணித்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யவில்லை’!: சீரம் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம்..!! appeared first on Dinakaran.
பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய பிரஜ்வல்லின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா 2வது முறையாக கடிதம்
கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும் உரிமை; அக்னி வீரர் திட்டத்தை விமர்சிக்க கூடாது என்பது தவறு: தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
மகாராஷ்டிராவில் பயங்கரம்; ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி: 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
கொல்வதற்கு ரூ.5 கோடி; வங்கதேச எம்பியின் உடலை வெட்டி வீசிய கொடூரம்: ப்ரிட்ஜில் இருந்த பாகங்கள் பறிமுதல்
பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை 2 நிமிடங்களில் நிறைவேற்றுகிறார்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதா?.. ஒடிசா புரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிச்சு கொடுங்க: மோடிக்கு வி.கே.பாண்டியன் பதிலடி
பள்ளி வகுப்பறையில் மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து ரூ5 லட்சம் கேட்டு மிரட்டல்: 5 மாணவர்கள் அதிரடி கைது