சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, அரசூர், கெம்பநாயக்கன்பாளையம், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம். நேற்றுமுன்தினம் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்திற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 2160 வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.