திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக வெற்றி முகம்; சென்னையில் 16 தொகுதியிலும் முன்னிலை

சென்னை: சட்டமன்ற தேர்தலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக முன்னிலை பெற்று வாரி சுருட்டியுள்ளது. காஞ்சிபுரத்தில் பெரும்புதூர் தவிர மற்ற தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 136 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பெறுவாரியான வாக்குகளை பெற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்புதூர் தொகுதியில் மட்டும் திமுக பின்தங்கியுள்ளது. தலைநகர் சென்னையை ஒட்டியுள்ள சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 37 தொகுதிகளில் 36 அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று அசைக்க முடியாத வகையில் வரலாறு படைத்து உள்ளது.

Related Stories: