அதானி துறைமுகத் தலைவராக இஸ்ரேல் முன்னாள் தூதர் நியமனம்

ஜெருசலேம்: அதானி துறைமுக நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் மற்றும் இஸ்ரேலின் கடோட் குழுவின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, இஸ்ரேலின் 2-வது பெரிய துறைமுகமான ஹைபா துறைமுகத்தை தனியார்மயமாக்குவதற்கான ஒப்பந்தத்தை ஏலத்தில் ரூ9,717 கோடிக்கு கடந்த ஜூலை 2022ம் ஆண்டில் பெற்றது.

இந்நிலையில், அதன் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் ரோன் மல்கா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இவர் கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றினார் என்பது குறிப்பித்தக்கது.

The post அதானி துறைமுகத் தலைவராக இஸ்ரேல் முன்னாள் தூதர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: