அகமதாபாத்: ஐபில் போட்டித் தொடரின் 25வது போட்டி அகமதாபாத் விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் சுப்மன்கில் 43 ரன் (38 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ரஸல் 45 ரன்(27 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோர் மட்டுமே டெல்லி அணியின் பவுலிங்கை தாக்கு பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து, 154 ரன் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணி ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்விஷா அதிரடியாக விளையாடினார்.