குன்னூர் : குன்னூர் அருகே அட்டடி பகுதியில் பாறையில் ஓய்வு எடுத்த சிறுத்தையை சிலர் புகைப்படங்கள் எடுத்தனர். குன்னூர் அருகே அட்டடி பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி மாலை நேரத்தில் பாறை மீது அமர்ந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் வன விலங்கு புகைப்பட கலைஞர்கள் என கூறி சிலர் தினந்தோறும் அங்கு சென்று சிறுத்தையை புகைப்படங்கள் எடுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் சிறுத்தையை புகைப்படம் எடுப்பதாக கூறி துன்புறுத்தி வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், அட்டி பகுதி சோலை மரக்காடுகள் அதிகளவில் உள்ள பகுதி.