உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், லக்னோ உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் வரும் 26ம் தேதி வரை ஊரடங்கு விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உபி மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.