திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதுபோல், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. நேற்று 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அதுபோல், இன்றும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருபவர்கள் ‘கோவிட் 19 ஜாக்ரதா கேரளா’ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது, நேற்றும முதல் அமலுக்கு வந்தது. இதற்கிடையே கேரளாவுக்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உடனடியாக ேவண்டும் என மத்திய அரசிடம் கோரப்பட்டு உள்ளது.