எல்லா தரப்பையும் தாக்கும் கொரோனா: கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சருக்கு தொற்று: சிபிஐ முன்னாள் இயக்குனர் பலி

போபால்: நாடு முழுவதும் 2வது அலையில் தீவிரமாக பரவி வரும் உருமாற்ற கொரோனாவிடம், ஏழை, பணக்காரன், பெரிய தலைவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் சிக்கி பாதித்து வருகின்றனர். கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கடந்தாண்டே ஒருமுறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் ேதறினார். நேற்று அவருக்கு 2வது முறையாக கொரோனா தாக்கி இருப்பது உறுதியானது. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காங்கிரஸ் தலைமை தகவல் தொடர்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கு நேற்று தொற்று உறுதியானது. பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுருக்கும் நேற்று தொற்று உறுதியானது. இதற்கிடையே,சிபிஐ முன்னாள் இயக்குனரான ரஞ்சித் சின்கா கொரோனா பாதிப்பு காரணமாக, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

Related Stories: