முசிறி: மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்த நிலையில் முசிறி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தொடரும் மின் வெட்டால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்.முசிறி, தொட்டியம், தாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக சிப்ட் முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்டுவரும் நிலையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளார்.