துறைமுகம் தொகுதியில் பாஜக கள்ள ஓட்டுபோட முயற்சி: தொகுதி வாக்காளர்கள் குற்றச்சாட்டு..!

துறைமுகம்: துறைமுகம் தொகுதியில் பாஜக கள்ள ஓட்டுபோட முயற்சி நடத்துகிறது என தொகுதி வாக்காளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சவுகார் பேட்டையில் இருந்து 100 பேரை அழைத்துவந்து கள்ளஓட்டு போட பாஜக முயற்சி என தொகுதி வாக்காளர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இத்தனை ஆண்டுகளாக ஓட்டுபோட்டு வந்துள்ளோம்; ஆனால் இப்போது எங்களுக்கு ஓட்டு இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவரை இங்கு வராத வடமாநிலத்தவர்கள் ஓட்டுபோட வந்துள்ளனர் என துறைமுகம் தொகுதி பிராட்வே வாக்காளர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: