கவனமாக இருங்கள் தொண்டர்களுக்கு டிடிவி.தினகரன் கடிதம்

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று மிக கவனமாக இருங்கள் என தொண்டர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று எழுதிய கடிதம்: தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோவது பற்றியோ, தமிழர்களின் நலன்கள் பாதிக்கப்படுவது பற்றியோ துளியளவு கூட கவலைப்படாமல், மக்கள் பணத்தைச் சுரண்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட துரோகிகளை மக்கள் நினைக்கவில்லை என்பதை பிரசார பயணத்தின்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, தவறுகள் நடைபெற சிறிதளவும் வாய்ப்பு இல்லாதபடி வாக்குப் பதிவு தொடங்கும் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நிறைவடையும் மாலை 7 மணி வரை வாக்குச் சாவடியில் மிக கவனமாக இருந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு கடமையாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: