* இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடு. அவரது மகள் சந்திரா நாயுடு (88). கல்லூரி நாட்களில் கிரிக்கெட் வீராங்கனையாக முத்திரை பதித்தவர், ஆங்கில பேராசிரியராகப் பணியாற்றியதுடன் இந்தியாவின் முதல் பெண் வர்ணனையாளர் என்ற பெருமையையும் வசப்படுத்தினார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்த அவர் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* உலகம் முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக உள்ளது. அதனால் ஜூலை 20-25 தேதிகளில் நடைபெற இருந்த ரஷ்ய ஓபன், அக்டோபர் 5-10 தேதிகளில் நடக்க இருந்த இந்தோனேஷியா ஓபன் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மின்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கு இரவு 8.00 மணி முதல் காலை 7.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வீரர்கள் 8.00 மணிக்கு பிறகு பயிற்சி செய்யவும் பின்னர் ஓட்டலுக்குத் திரும்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.* உஸ்பெகிஸ்தான் மகளிர் கால்பந்து அணியுடன் நடந்த நட்பு ரீதியிலான போட்டியில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் போராடித் தோற்றது.
* கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஜப்பானின் ஒசாகா நகர நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.* மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனல் வரை முன்னேறிய கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு, தரவரிசையில் 3 இடம் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற ஆஷ்லி பார்தி (ஆஸி.) நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.