மும்பை: 14வது ஐபிஎல் தொடர் வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடருக்காக வீரர்கள்தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது.டெல்லி வீரர் அக்ஷர்பட்டேல், சென்னை அணி நிர்வாகி, மும்பை வாங்கடே ஸ்டேடிய ஊழியர்கள் 8பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவின் நிதிஷ்ரானா தொற்றில் இருந்து மீண்டுள்ளார். இந்நிலையில் பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. உடனடியாக அணியை விட்டு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார்.