திருப்பதி : திருப்பதியில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக சக்தியை நிலை நிறுத்த வேண்டும் என்று மாநகராட்சி துணை ஆணையாளர் சந்திரமவுலீஸ்வரர் கூறினார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி மாநகராட்சி மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் வருகிற 17ம் தேதி திருப்பதி பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக தாரகராம விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.