சேலம்: சேலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2174 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மாதேஷ், மகன் கண்ணன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இருவரும் ஏற்கனவே சேலம் நாலுரோடு பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக வழக்கு உள்ளது.