அதன்படி ராமசாமி வந்து பார்த்த போது, ஆறுமுகத்தின் தலை மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருந்ததை கண்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பார்த்த போது, ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து ராமசாமி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் எனது சகோதரர் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தார். எனவே அவரது மனைவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேடடை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த ஆறுமுகம் மனைவி ஜெயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post போதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை? மனைவியிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.