சிறுமிக்கு பாலியல் தொல்லை

அண்ணாநகர்: அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அண்ணா நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்கிறேன். எனது 17 வயது மகளை வேலைக்கு அழைத்து செல்வது வழக்கம். அப்போது அந்த வீட்டின் கார் டிரைவர் அரி (41), மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்தபோது கார் டிரைவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. போலீசார் கார் டிரைவர் அரி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Related Stories: