கலைஞர் வேடம் அணிந்து பிரபாகர் ராஜாவுக்கு ஆதரவாக பிரசாரம்

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா நேற்று சின்னமயா நகர், நடேஷ் நகர், சாதிக் பாட்ஷா நகர், சாலிகிராமம், தசராபுரம் மற்றும் வடக்கு பகுதிகளில் வீடு, வீடாக சென்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கலைஞர் போல் வேடமணிந்த ஒருவர், அவர் போல பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட பிரபாகர் ராஜாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் பிரபாகர் ராஜா தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த 12ம் தேதி தொடங்கினார்.

நேற்று வரை அவர் மொத்தம் 24 நாட்களாக, 420 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்த சென்று, மொத்தம் 330 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு திமுக வேட்பாளர் பிரபாகர்ராஜாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘வேட்பாளர் பிரபாகர் ராஜா திமுக வேட்பாளர்களில் மிகக் குறைந்த வயதுடையவர். 32 வயதானவர். இளைஞர்களுக்கு எவ்வாறு திமுக முன்னுரிமை தரும் என்பதற்கு அடையாளமாக, எடுத்துக்காட்டாக பிரபாகர் ராஜா உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்,’ என்றார்.

Related Stories: