திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் முரசு சின்னம், குக்கர் சின்னம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசாமலே கையை மட்டும் அசைத்துவிட்டு சென்றார். அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் தாமதமாக வந்தது பல மணி நேரம் காத்திருந்த வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். ஸ்ரீரங்கம் தொகுதியில் குக்கர் சின்ன வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த விஜயகாந்த் வேனில் நின்று கையை கூட அசைக்கவில்லையாம்.. சீட்டில் உட்கார்ந்தபடி தலையை தலையை ஆட்டிக்கொண்டு வணக்கம் சொல்லியபடி சென்றாராம்.. தொடர்ந்து, திருவெறும்பூர் தொகுதிக்கு சென்ற விஜயகாந்த், அங்கு பஸ் நிலையம் அருகில் வேனில் நின்றபடி முரசு சின்னத்தை மட்டும் காண்பித்துவிட்டு சென்றார்.