திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: மதுரை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் வளம் பெருகும். எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்து 7 வருடங்கள் ஆகின்றன.