பெரியகுளம்: தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர், நேற்று தனது சொந்த ஊரான பெரியகுளத்தில், தொகுதி அதிமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், திடீரென பிரசாரத்தை ரத்து செய்த ஓபிஎஸ், முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில், பெரியகுளம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மாரியம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தார். தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, ஓபிஎஸ் கோயில்களில் தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.