ராதா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் பிரசாரம்

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் நேற்று தொகுதிக்குட்பட்ட ராதா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் தொகுதி மக்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. 29 கோடியில் ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அதிமுக அரசால் செய்யப்பட்டுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளான 6 இலவச சிலிண்டர், வாஷிங் மெஷின், மாதம் 1500 உதவித்தொகை, வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், சூரிய சக்தி அடுப்பு உள்ளிட்டவற்றை உங்களுக்கு பெற்று தருவேன். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,’ என்றார்.

அதற்கு பொதுமக்கள், ‘கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எங்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டது. எனவே நிச்சயம் நாங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களிப்போம்’ என உறுதியளித்தனர். பிரசாரத்தின்போது, சிட்லபாக்கம் ராஜேந்திரனுடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: