ஜான்பாண்டியனை ஆதரித்து பிரிசில்லா பாண்டியன் பிரசாரம்

சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் நேற்று 78வது வார்டில் உள்ள அஷ்டபுஜம் சாலை, ரங்கய்யா தெரு, மதுரை தெரு, காஞ்சிபுரம் தெரு, நரசிங்க பெருமாள் தெரு, சி.கே.பி கோயில் தெரு, மாணிக்க செட்டி தெரு, நம்மாழ்வார் தெரு, அவதான பாப்பையா ரோடு, ரங்கப்பிள்ளை சந்து, வி.வி.கோயில் தெரு, சூளை நெடுஞ்சாலை, டி.கே.முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாஷிங் மிஷன், மாதம்தோறும் ரூ.1,500, வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர் உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நமது வேட்பாளர் பெற்றுக் கொடுப்பார். இந்த தொகுதியில் குடிநீர் பிரச்னை, அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி கொடுப்பார். நீங்கள் எந்த நேரமும் நம்முடைய வேட்பாளரை சந்தித்து உங்கள் குறைகளை கூறலாம். அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி கொடுப்பார். இந்த தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவதே லட்சியம். அதுவே நமது வேட்பாளர் முதல் பணியாக இருக்கும்,’ என்றார்.

Related Stories: