வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம்; அதிமுக தலைவர்கள் மோதல் குறித்து முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?.. ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: வன்னியருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கள் மோதிக் கொள்வது குறித்து முதல்வர் பழனிசாமி என்ன சொல்லப்போகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அமைச்சர்கள் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தற்காலிகமானது என்று கூறி வருகிறார்கள். துணை முதல்வர் ஓபிஎஸ்சும், இதே கருத்தை கூறியுள்ளார்.

இந்த மோதல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்வர் கூறுகிறார். அவருக்கு தென் மாவட்டங்களின் கவலை. இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு. முதல்வர் என்ன சொல்லப்போகிறார்?

Related Stories: