விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘ஒரு விவசாயி முதல் அமைச்சராக இருக்கிறார். அதனால் அவர் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும். அதுபோல் இங்கு வேட்பாளராக உள்ள கார்த்திகேயன் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நமது வேட்பாளர் கார்த்திகேயன்.