அதிமுக கூட்டணி ஒரு சமூக நீதி கூட்டணி: அன்புமணி பிரசாரம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  ‘ஒரு விவசாயி முதல் அமைச்சராக இருக்கிறார். அதனால் அவர் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும். அதுபோல் இங்கு வேட்பாளராக உள்ள கார்த்திகேயன் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நமது வேட்பாளர் கார்த்திகேயன்.

அதிமுகவில் நாம் கூட்டணி வைத்ததற்கு காரணம் அது ஒரு சமூக நீதி கூட்டணி. அதற்கு உதாரணம் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் இன்று 500 பேருக்கு மேல் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை தந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. 21 பேர் உயிரை தியாகம் செய்து 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் டாக்டர் ராமதாஸ். எடப்பாடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் கிைடக்கும்’ என்றார்.

Related Stories: