தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, வண்ணாரப்பேட்டை பகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும், மலர் தூவியும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அச்சாரமாக ராயபுரத்தில் எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். நான் இதே தொகுதியில் வசிப்பவன். உங்கள் பிரச்னைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம். உடனடியாக சரிசெய்து கொடுப்பேன். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.