சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக துணை ராணுவப் படையினர் 30க்கும் மேற்பட்டோர் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது, நான்கு வழிச்சாலையாக உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிப்பாதையாக மாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. இதற்கான கனரக இயந்திரங்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.