தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று காலை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவிலிருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது காசி தோட்டம், பெண்டில்மென் கார்டன், வாத்தியார் ஏகப்பன் தெரு, ஏ.ஜெ.காலனி, கொடிமர சாலை, சேவியர் தெரு, இந்திரா காந்தி நகர், ஜி.எம்.பேட்டை, திரௌபதி கோயில் தெரு, துரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மீனவர் நலனை பொறுத்தவரை, இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். சமீபத்தில் கூட மீன் விற்பனை செய்பவர்கள் மழை, வெயிலில் மீன் விற்பனை செய்ய வேண்டியுள்ளது என்பதற்காக, மீன்பிடி துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் ஒரு மீன் மார்கெட் கட்டிக்கொடுத்துள்ளேன்.