ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கோர விபத்து; சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு: ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பிய போது துயரம்

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ வேண் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கிருந்து நெல்லூர் வரும் போது தாமரமடகு என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பை தேசிய நெடுஞ்சாலையில்  சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மற்றோருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். 15 பேரில் 5 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர்கள் ஆவர். ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: