‘ரெக்கார்டிங் வாய்ஸ்’ மூலம் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு: பழைய தேர்தல் பிரசார பேச்சு ஒலிபரப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பழைய பேச்சுகளை ஒலிக்க செய்தபடி, எழும்பூர் தொகுதியில் தனது 2வது நாள் பிரசாரத்தை நேற்று மேற்கொண்டார். விஜயகாந்த் தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டியில்,தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து நேற்றுமுன்தினம் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். இதனைதொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில், சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து, எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான சேத்துபட்டு,சூளை என எழும்பூரின் முக்கிய பகுதிகளில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். பிரசாரம் தொடங்கியபோது நின்றபடி மக்களுக்கு கையசைத்து வாக்கு சேகரித்தார். பின்னர் வேனின் உள்ளே அமர்ந்தபடி விஜயகாந்த் மக்களை பார்த்து கையசைத்து கொண்டே இருந்தார். அப்போது வாகனத்தில், கடந்த தேர்தலின் போதும், மாநாட்டின் போதும் விஜயகாந்த் மக்களிடம் பேசிய பழைய பேச்சுகள் ஒலிக்கப்பட்டது.

Related Stories: