தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று பம்மல் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மக்கள் பட்டாசு வெடித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அப்போது பேசிய அவர், ‘‘பம்மல் பகுதியில் சாலை வசதி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆர்.ஓ.பிளான்ட் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்து உள்ளேன். மக்களின் தேவையை நிறைவேற்றி உள்ளேன். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பல்லாவரம் தொகுதிக்கு கிடைத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,’ என்றார்.