மும்பை பறந்தனர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
அதன்படி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சிஎஸ்கே ஏப்.10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. அதற்காக டோனி தலைமையிலான சென்னை அணி நேற்று விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றது. அங்கு கொரோனா பரிசோதனை முடிந்ததும் பயிற்சியை தொடங்குகின்றனர். சிஎஸ்கே வீரர்கள் மும்பை சென்றது குறித்து அறிவித்த அணியின் தலைமை செயல் அலுவலர் கே.எஸ்.விசுவநாதன், ‘2020 ஐபிஎல் தொடர் முடிந்ததும், டோனி அடுத்த தொடருக்கு மார்ச் முதல் பயிற்சியை தொடங்கி விடலாம் என்றார். சொன்னது போல் மார்ச் மாதம் சென்னை வந்து நின்றார். இந்த தொடரில் கட்டாயம் சாதிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார் டோனி.