கோலார்: கோவிட்-19 பாதிப்பு நேரத்திலும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டு வந்த துப்பரவு தொழிலாளர்களின் பணிகள் சிறப்பு மிகுந்தது என்று ஏ.பி.எம்.சி. முன்னாள் தலைவி ராஜேஸ்வரி தெரிவித்தார். கோலார் நகரில் துப்பரவு தொழிலாளர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜேஸ்வரி பேசியதாவது: நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நேரத்திலும் துப்பரவு தொழிலாளர்கள் எந்த அச்சமும் கொள்ளாமல் தினமும் தங்களின் பணிகளை வழக்கம் போல் செய்து வந்தனர். இது சிறப்பு மிக்க பணியாக தான் நாம் பார்க்க வேண்டும். அதே போல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது தங்களின் கைகள் அசுத்தம் ஏற்படும் என்று தெரிந்தும் நம்மை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்வதில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர்.