காங்கிரஸ் திட்டங்களை சீர்குலைத்ததுதான் பிரதமரின் சாதனை: வீரப்பமொய்லி அதிருப்தி

பெங்களூரு: சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வீரப்பமொய்லி கூறுகையில், ‘‘மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதில் ஜவஹர்லால் நேரு நகர வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் உள்பட பல நல்ல திட்டங்களை நரேந்திரமோடி தலைமையிலான அரசு ரத்து செய்தது மட்டுமே 7 ஆண்டு கால ஆட்சியின் சாதனையாகஉள்ளது. மக்களை ஏமாற்ற மின்னல் வேகத்தில் பெட்ரோலிய பொருட்கள் விலையை கடந்தாண்டு இறுதியில் குறைத்து தற்போது அதே வேகத்தில் உயர்த்தியுள்ளது மட்டுமே பாஜ ஆட்சியின் சாதனையாகும்.

மக்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சியை அழிக்கும் முயற்சி ஒருநாளும் நடக்காது. தமிழகம், கேரளா உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவு மோடி தலைமையிலான பாஜ ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

Related Stories: