சென்னை: ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 48வது வார்டு பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பிரசாரம் செய்தார். தொடர்ந்து, பார்த்தசாரதி தெரு, நடராஜன் தெரு, டி.வி.கே.தெரு, ஜமால் சவுகார் தெரு, முனிராம் பாண்டியன் தெரு, வீரபத்திர தோட்டம், மண்ணப்ப முதலி தெரு, நைனியப்பன் தெரு, முத்தையா முதலி தெரு, தட்டான்குளம் தெரு, சுந்தர விநாயகர் கோயில் தெரு, அம்மையப்பன் தெரு, தங்கவேல் பிள்ளை தோட்டம், துளசிங்கம் தெரு, உல்லாரம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேண்ட் வாத்தியங்கள் முழங்க அதிமுக தொண்டர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.