கருங்கல்: மக்களின் கணிப்பு தேர்தல் அன்று வெளிப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், கிள்ளியூர் தொகுதி தமாகா வேட்பாளர் அதிமுக சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜூட் தேவ் ஆகியோரை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக கருங்கல் வந்த ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: