கும்பகோணம்: நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை நேற்றிரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாக போற்றப்படுவதுமான கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவ தேர் திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.