மாலி : மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துவிட்டனர். மாலி நாட்டை ஒட்டிய நைஜர் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இரு சக்கர வாகனங்களில் ஆயுதங்களை ஏந்தி வந்த மர்ம நபர்கள், தஹவுவா, இன்தாஜாயென், பகோராதே மற்றும் பிற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தும் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.