சென்னை முழு ஊரடங்கு நாளிலும் கொரோனா நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு May 16, 2021 தமிழ் தமிழ்நாடு அரசு சென்னை தமிழ்நாடு அரசு சென்னை: முழு ஊரடங்கு நாளிலும் கொரோனா நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. காலை, 10:00 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை, பழக்கடைகள் திறந்திருந்தன. மருந்தகங்கள், உணவகங்கள் தவிர மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. காலை, 10:00 மணிக்கு மேல், மக்கள் வீடுகளில் முடங்கினர். ஞாயிற்றுக்கிழமை, தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எந்த கடைகளும் திறக்கப்படாது. இதன்படி நாளை காலை, 4:00 மணி வரை முழு ஊரடங்கு தொடரும். நாளை காலை, 6:00 மணி முதல், திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்றவற்றுக்காக, மாவட்டங்கள் உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் மேற்கொள்ள,’இ – பதிவு’ அவசியம். இதன்படி eregister.tnega.org என்ற இணையதளத்தில், இ — பதிவு செய்து கொள்ள வேண்டும் அந்த ஆவணத்துடன் பயணம் செய்தால், தடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. இதனிடையே நேற்று முதல் டோக்கன் அடிப்படையில் தினமும் 200 பேர் வீதம் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் டோக்கன் பெற்றுள்ளோருக்கு தடையின்றி ரேஷன் கடைகளில் இன்று நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. … The post முழு ஊரடங்கு நாளிலும் கொரோனா நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல்
அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை
சென்னையில் சாலையோர நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு
தெற்காசியாவில் முதன்முறையாக கருப்பை புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை
ஆர்.கே.நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு