சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தற்போது கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக கோவையில் தங்கியுள்ள கமல் தினமும் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதன்படி, நேற்று அவர் கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி செய்தபோது வாக்காளர்கள் அவரை சூழ்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்். ஆட்டோகிராப் பெற்றார்கள். இந்த நெரிசலில் யாரோ ஒருவர் கமலின் காலில் மிதித்து விட அவர் வலியால் துடித்தார். காரணம், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு காலில் ஆபரேஷன் நடந்தது. உடனடியாக மருத்துவமனை சென்ற கமல் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டார். காலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால் கமல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.