திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி திருவிழா நேற்று தொடங்கியது. பங்குனி மாத பூஜைகள், மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா நேற்று (19ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.