சென்னை:தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், இந்த மாதம் முதல் தொற்று அதிகரித்து வருவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ம் தேதி 759 பேர், 16ம் தேதி 867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 395 பேருக்கு புதிதாக தொற்று அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 71,888 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.