டெல்லி: தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை ரூ.133 கோடி மதிப்பிலான பணம், நகை, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
