சைதை தொகுதியில் வாக்கு சேகரிப்பு மக்கள் தேவையறிந்து பணியாற்றும் உங்களுக்கு தான் நிச்சயம் வெற்றி: மா.சுப்பிரமணியனுக்கு பொதுமக்கள் வாக்குறுதி

சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மா.சுப்பிரமணியன், தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, நேற்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை தான் வசிக்கும் 171 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். சைதை கிழக்கு மற்றும் மேற்கு பகுதி திமுக செயலாளர்கள் ரா.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர். பிரசாரத்தின்போது அப்பகுதியில் வசிக்கும் இல்லத்தரசிகள் கூறியதாவது: 2019ம் வருடம் ஜூலை மாதம் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது, சென்னை முழுவதும் பெண்கள் காலி குடத்துடன் தண்ணீக்காக தெருத்தெருவா அலைந்தார்கள். ஆனா, எங்க, சைதை தொகுதியில மட்டும், நீங்க செஞ்ச சேவையால, நாங்க குடிநீர் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக இருந்தோம்.

நீங்களே இரண்டு வேளையும், பெரிய 2 தண்ணீர் லாரி மூலம் குடிநீர் வழங்கியதை நாங்க இன்னும் மறக்கவில்லை. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற சமூக அக்கறையின் காரணமாக 2019 ஜூலை 5ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூலம் சைதையில் வி.எஸ்.முதலி தெரு, மாரி ஓட்டல் அருகில் 1,000 இடங்களில் மழைநீர் சேமிக்கும் புதிய திட்டத்தை தொடங்கி அதை சைதைத் தொகுதி முழுவதும் செயல்படுத்தியும் காட்டினீர்கள்.

மக்களின் தேவை அறிந்து செயல்படுவதால், இந்த தொகுதி மக்கள் ஓட்டு கண்டிப்பா உங்களுக்குத்தான், நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க, கவலைப்படாமல் போங்க,’’ என்றனர்.  

பகுதி நிர்வாகிகள் மின்னல் கந்தப்பன், இ.முருகேசன், ஆர்.டி.மூர்த்தி, வி.பி.ஜானகிராமன், சி.பி.இறைவன், வட்ட செயலாளர்கள் தா.மோகன்குமார், நா.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.செந்தில், நேருநகர் எஸ்.பாட்சா, இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணகுமார், மாணவர் அணி ஜிம் க.பிரபு, கேபிள் சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் பிரசாரத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து, மாலை 4 மணி அளவில் திடீர் நகர், கோதாமேடு, சாமியர் தோட்டம், அபித் காலனி, துரைசாமித் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் மா.சுப்பிரமணியன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

Related Stories: