புதுடெல்லி: பட்லா ஹவுஸ் என்கவுன்டர் வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் சர்மாவைக் கொலை செய்த குற்றவாளி ஆரிஸ் கானுக்கு மரண தண்டனை விதித்து டெல்லி செசனஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
தெற்கு டெல்லியில் ஜமியா நகரில் கடந்த 2008ம் ஆண்டு பட்லா ஹவுஸ் என்ற பகுதியில் தீவிவராதிகள் தங்கியிருந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகளின் பதில் தாக்குதலில் இன்ஸ்பெக்டர் மோகன் சர்மா குண்டு பாய்ந்ந்து பலியானார். இச்சம்பவத்தில் தொடர்புடைய அரீஜ் கான் தப்பியோடினார். நேபாள எல்லையில் அவரை டெல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தீப், ஆரிஸ் கான் குற்றவாளி என கடந்த 8ம் தேதியன்று தீர்ப்பளித்தார்.